Friday, December 23, 2011

கவிதை நேரம் ..


படி படி படி
விண்ணைப் படி மண்ணைப் படி 
கண்ணைப் படி நெஞ்சைப் படி 
பஞ்சப்படி பெற அல்ல
பாவம் யாவும்
தொலையப் படி..

விரைந்து படி நிறைந்து படி
சீறிப்படி சினந்து படி
ஆழப்படி அகலப்படி
ஆபத்தான ஆளைப்படி

நிலவைப்படி நிலத்தைப்படி
நீரைப்படி காற்றைப்படி
ஏனிப்படி ஆகுதென்று
ஏகாந்தம் கடந்து படி

வீட்டுப்படி தாண்டும்படி
சொல்லிப்படி சொக்கிப்படி
சொக்கநாதன் சுடரென்றாலும்
சொலவடையாய் மட்டும் படி

No comments: