Wednesday, March 03, 2010

THE GREATEST HUMILIATION OF OUR NATION CALLED NITHYAANANDHA

IN TAMIL



மற்றும் ஒரு கபடதாரி...
முட்டாளாகும் மகா ஜனம் .

முன்னுரைக்கும்,என்னுரைக்கும் முன்...

A DISCLAIMER

இது கட்டாயாமாக மதம் சார்ந்த உணர்வுகளுக்கு
அப்பாற்பட்ட கட்டுரை
என்பதையும்,"மதங்கள் எதுவாயினும்
மக்களுக்கெதிரான காரியங்களும் ,
மற்றவர் பலவீனத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தும் SO CALLED சுவாமிகளின்
பொறுக்கவொண்ணா செயல்பாடுகளும்,
மனசாட்சி உடையவர்களின்
கண்டனத்திற்கு உள்ளாகும் விஷயங்களே "
என்பதையும் மிக்க பணிவன்போடு
தெளிவுபடுத்தி கொள்கிறோம்.
- தள ஆசிரியர்

ஒரு முன்னுரை

அமெரிக்காவில் விரைவாக பணம் ஈட்ட
ஒரு 'பரவச' ஞானி மேற்கொண்ட
சில வியாபார யுக்திகள் குறித்த விமரிசனம் ..
முதலில் உங்கள் பார்வைக்கு...







“யார் யார் சிவம் ?
நீ நான் சிவம்!
வாழ்வே தவம்..
அன்பே சிவம!
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!”
-வைரமுத்து




‘மூடர்கள் உருவாவதில்லை ,
பிறக்கிறார்கள் ’ என்று
வெறுத்து போய கூறினார் ஒரு அறிஞர் .
நம் இந்திய தேசத்தை பொறுத்த
மட்டும் ‘ஆன்மீகம் ’
என்ற பெயரில் மூடர்களும் ,
(வடி கட்டிய..?!) முட்டாள்களும் உருவாக்கப்படுகிறார்கள்
என்பது மீண்டும் ஒரு முறை
நிரூபனமாகியுள்ளது.

இம்முறை உபயம் : நித்யானந்த பரமஹம்சர்(!) .


பெங்களூரிலும் , தமிழ்நாட்டிலும்
வெகு வேகமாக பரவி வரும் இந்த
விஷக்கிருமியை ,
தன் செய்திகளில் ,
நன்றாக உறுதிப்படுத்திக்கொண்டு
பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு
அம்பலப்படுத்தியது
SUN தொலைகாட்சி நிறுவனம் .

‘மார்ச் 2 2010’
இரவுச் செய்திகளில் அந்தக் காட்சி இப்படி விரிகிறது ..


பலருக்கும் (நூற்றுக்கணக்கில் )
பிரம்மச்சரியம் பயில்விக்கும் இந்த பிரஹஸ்பதி
ஒரு மெத்தையில் உல்லாசமாக
மல்லாந்து காவி வேட்டி அவிழ
படுத்து கிடக்கிறது .
அருகே வரும் ஒரு இளம் நடிகை
('நாடோடித் தென்றல்' ரஞ்சிதா என்று தற்போது அறியப்பட்டுள்ளது ) ,
தன் கையில் உள்ள ஒரு
( gelusil மாத்திரை போல் தோற்றமளிக்கும் )
ஒரு போதை வஸ்துவை சுவாமியிடம்
தர அதை வாங்கி உதட்டிற்கு அடியில்
அடக்கிக்கொல்கிறார் சுவாமிகள் .
கட்டிலை சுற்றி வரும் அந்த நடிகை
சுவாமியின் கால்களை பிடித்து விடுவது
மட்டுமல்லாமல்,
அவர் அருகே குனிந்து சுவாமி கண்டறிந்த

‘கல்பதரு ’(!) மற்றும்
ASP (ஆனந்த ஸ்பூர்ணா ),
NSP (நித்ய ஸ்பூர்ணா )
ஞானத்தை பெற்று
பரவச நிலையை அடைகிறார் .



கிட்டத்தட்ட ஒரு ஆபாச படம் போல
விரியும் இக்காட்சியை
கண்டு
பொது மக்களும் ,
இந்து முன்னணியினரும் ,
நடு நிலையாளர்களும் ,
கொதித்து போய
கிடக்கிறார்கள் .
வழக்கு தொடர பலர் வலியுறுத்தியிருக்கும்
நிலையில் 'சரசகு ரா..ரா..' சாமியை இப்போது
காணவில்லை..
விசாரித்தால் கும்பமேளாவில் இருக்கிறாராம்..
(அட தேவுடா...!!)

பொது வாழ்வில் , சமூக சேவைகளில் ,
(முக்கியமாக ஆன்மீகத்தில்)
தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
போதனைகள் புரிந்து,
சுவாமி என்று தன்னைத் தானே பறை சாற்றிக் கொண்டு,
அதனால் கிட்டும் கோடிகளில், பல அப்பாவிகளின்
சேமிப்பில்,அழகிகளோடு புரண்டு கிடந்து விட்டு ,
"எவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும்
நுழைய யாருக்கும் அனுமதி இல்லை"
என்று நியாயப்படுத்தும் இந்த ஒரு வாக்குமூலத்தையே
அடிப்படையாகக் கொண்டு இது போன்ற
ஆசாமிகளுக்கு அதிக பட்ச தண்டனையை
வழங்க சட்டத்தில் இடமுண்டு..

சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பினாலும்,
மேலிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து
இவர்கள் என்றும் தப்புவதில்லை.

இது ஒரு புறமிருக்க ,
நம் கேள்விக்கணைகள் யாவும் மதி இழந்த
மக்களை நோக்கித் தானே ஒழிய ,
இது போன்ற
மனசாட்சி கொலைகாரர்களை
நோக்கி அல்ல .


'எத்தனை ஆயிரம் முறை
யார் யாராலோ அலை
கழிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும்
மடையர்களாக
ஆக்கப்படினும்,நமக்கு ஒரு
ஆன்மீக வழிகாட்டியும்,
நம் துன்பங்களை நம்மிடம்
இருந்து பிய்த்து எறிய
ஒரு குருவும் அவசியம் தேவைப்படும்
வரையில் இவர்கள்
எல்லாம் புற்றீசலை
விட வேகமாக புறப்பட்டு வருவர்'
என்பதை இப்போதாவது உணர்ந்து
தெளிய வேண்டிய நிலையில் கட்டாயம்
உள்ளோம்.

(இந்நிலையில் 'கல்கி' பகவான் என்று

மற்றொரு பிரகஸ்பதியும் பலவீனமான பெண்களுக்கு
'ஞான' மருந்து கொடுத்து, ஆசி வழங்குவதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன)

அப்பாவி பக்தர்களே..
தயவு செய்து எந்த ஆசாமியையும் கண்டு
இனியேனும்
'ஆ..! சாமி' என்று கொண்டாடாமல்

(அவைகள் எந்த மதம் சார்ந்த பிண்டங்களானாலும் சரி..)
உங்கள் இல்லத்திலும்,உள்ளத்திலும்
வைக்க வேண்டிய இடத்தில்
வைத்து எச்சரிக்கை உணர்வோடு
இருக்கும்படிக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..

'நம் அண்டை வீட்டானையும்,
அடுத்திருக்கும் பசித்த மனிதனையும்
நேசித்தால் போதும்..
கடவுளுக்கு அருகில் நாம் எப்போதும் இருக்கலாம்.'
என்பதை நீங்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள்..


தன்னைத் தானே சாமி
என்று பறைசாற்றிக் கொள்பவர்களை
மருத்துவ ரீதியாக மனோதத்துவ
நிபுணர்கள் ‘மன நோயாளிகள்’ என்கிறார்கள்
தயவு செய்து இந்த உண்மையை அறிந்து வைத்திராத
அப்பாவிகளுக்கு இதை அறிந்தவர் எடுத்துரையுங்கள்.




‘கதவை திற காற்று வரட்டும் ’
என்பவன்
தன் வாழ்வில் அனைத்து கதவுகளையும்
அடைத்துக்கொண்டு வேட்டி அவிழ
உள்ளே அந்நிய நாட்டு செல்வத்தில்
நித்தியமாக போகித்து
கொண்டிருப்பது குறித்து
எவருக்காவது முன்னமே தெரிந்தாலும்
அவை எல்லாம் வெளி வரும்
வரை யாரும் இங்கே
கேள்வி கேட்கவோ
மூச்சு விடவோ கூடவே கூடாது .
மீறினால் அவன்
உயிருக்கும் ,உடமைக்கும்
எந்த உத்தரவாதமும் இல்லை .

{ சமீபத்திய உதாரணம்: காஞ்சியில்
கொலையான கோவில் ஊழியர் }


எங்கே போகிறோம் தோழர்களே ?
1) ராஜசேகரன் ’
என்றொருவன் படிப்பற்று ,
வேலையற்று திருவண்ணாமலையில்
திரிந்து,

பின்னர் ‘நித்யானந்தா’ என்று
திடீர் மாற்றம் அடைந்து,
இத்தனை செல்வத்தை
குவித்தது எங்ஙனம் ..?

2) இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் அல்லது

எது எது இயங்குகிறது ?

3) இன்னும் எத்தனை

எத்தனை சட்ட விரோத ,
தேச விரோத செயல்கள் யாவும்
ஆசிரமம் என்ற பெயரில் இந்த இடங்களில்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன ?

4) யார் கொடுக்கும் தைரியத்தில்
இவர்கள் எல்லாம்

துணிந்து ,தொடர்ந்து
பீடு நடை போடுகிறார்கள் ?

5) இது போன்ற செய்திகளின்
பின்னணியில் உள்

நாடோடு முடிந்து போகிற குற்றங்கள்
மட்டும் அடங்குமா ..
அல்லது அயல் நாட்டின் தொடர்பும்
இவை உள்ளடக்கியதா ..?

6) அப்படி உண்டென்றால் அதை

தடுக்க என்ன மாதிரி
நடவடிக்கை எடுக்கப்படப்போகிறது ..?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இறுதி வரை
எந்த தெளிவான விடையும்
கிடைக்கப்போவதில்லை என்பதை
நீங்களும் அறிவீர்கள் ,நானும் அறிவேன் .

நம் சட்ட அமைப்பும்
எப்போதும் போல் இப்போதும்
அப்பாவிகளை விட குற்றவாளிகளை
விழுந்து விழுந்து காப்பாற்றும் .

இன்று குய்யோ ,முறையோ
என்று கொந்தளித்து
கொண்டிருக்கும் அமைப்புகள்
கூட நாளடைவில் சாந்தி அடைந்து
பின்னர் இது போன்ற வேறு ஒரு நிகழ்வுக்காக
நாவை தொங்க விட்டு
நாய் போல் காத்திருக்கும் .


‘இன்று ஒருவன் சிக்கினான். .
இன்னும் எத்தனை பேர் ?’
என்ற
கேள்வியும் எப்போதும் போல்
‘எப்போதும் ’ இருந்து கொண்டிருக்கும் .


அதன் சுவாரஸ்யம் ஊடகங்களுக்கு
‘எப்போதும் ’ போல் பணமாக மாறும் .


வெளிப்படுத்த ஒரு விலை ,
அடக்கி வாசிக்க
ஒரு விலை ,
பின்னர் முழுவதுமாக துடைக்க, மறைக்க
ஒரு விலை என்று இதன் பின்னணியில்
தன் வர்த்தகத்தை
பல ஊடகங்கள் பெருக்கிகொள்ளும் .

மட்டுமல்லாமல் வழி நெடுக்க
அரசாங்க சொத்துக்களுக்கோ ,
பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கோ ,
இது போன்ற ஆசாமிகளின் ஆசிரம கட்டிடங்களுக்கோ ,
வழிபாட்டு தளங்களுக்கோ திடீரென
விழிப்புணர்வு (!) பெற்ற
ஆன்மீக தொண்டர்களால் , பெரும்
சேதம் ஏற்படும் .


இது போன்ற ‘பள்ளியறை ’
ஞானிகளிடம் முழுச் சரணாகதி
அடைந்து விட்ட சிலரோ ,
வேறு வழியின்றி இந்தச் செய்திகள்
பொய்யானவை என்றும் ,
இது அவதூறு பரப்புவதற்காக வேற்று மதத்தினர்
செய்த சதி என்றும் தம்மைத்தாமே
ஆசுவாசப்படுத்திக்கொள்ள எதையாவது
சொல்லி வைத்து ,மெல்லவும் முடியாமல் ,
விழுங்கவும் முடியாமல்
அவஸ்தைக்கு உள்ளாவர் .
சிலருக்கு அதில் வியாபார நோக்கம் இருக்கும்;
அதுவும் உண்மையே..



அவமானம் தாளாமல் மன அழுத்தத்தில்
சில உண்மை ஊழியர்கள் தற்கொலை
முயற்சியில் கூட ஈடுபட நேரிடும்.
பாவம் .. யார் கண்டது ..?

அப்பாவி பக்த கோடிகளே,
சிலர் சுய அறிவில் மாற்றம் அடைவர் ,
சிலர் சொல் புத்தியில் பயனடைவர்
சிலர் பட்டுத் திருந்துவர்.
சுயமாயும்,சான்றோர் உரைத்தும்,
ஏன்...பட்டும் கூட திருந்த முடியாத
பாவப்பட்டவர்களும்,
'ஆன்மீக' வியாபாரத்தில்
கூட்டு வைத்து
பெரும் லாபம் கொழிக்கும்
வியாபார முதலைகளும்,
இங்கே உலவும் வரை
இந்தப் பகல் வேடதாரிகளின்
களியாட்டங்கள்
'எதை தின்றால் பித்தம் தெளியும்'? என்ற
மக்களின் பலவீனத்தையும் சேர்த்துக்கொண்டு
பயமற்று தொடரவே செய்யும்.


இன்னும் ஓரிரு வருடங்களில்

தன் 3200 பற்களையும்
காட்டிக்கொண்டு
நித்ய ஆனந்தமாக
'குற்றமற்ற
அப்பழுக்கற்ற ஞானி நான் '
என்று பிரகடனம் செய்து
நீதிமன்றத்திலிருந்து நிரபராதியாக
இந்த பிரம்மஹத்தி வெளியேறும் ..
ராமர் காப்பாரோ இல்லையோ..
'ராம் ஜெத்மலானி' காப்பார்.



மீண்டும் தன் சமுதாய தொண்டுகளை(!)
(இம்முறை மிக மிக கவனமாக)
தொடர பல பக்த கோடிகள் தயவும் கிட்டும்.


வழக்கம் போல் நாமும் ஒரு வாரமோ பத்து நாட்களோ
பொருமிக் கொண்டிருந்து விட்டு நம்
அன்றாட பணிகளை கவனிக்கச் சென்று விடுவோம் .


யாரால் இவர்களை என்ன செய்து விட இயலும் ..?
முட்டாள் சமூகமும்,முன்னேற்றத்தை மாயாஜாலமாய்
அடைந்து விடத்துடிக்கும் கடைசி மனிதனும்
இங்கே இருக்கும் வரை...?


வாழ்க பாரதம் !
வளர்க ஜனநாயகம் !
தழைத்தோங்குக ஆன்மீகம் !
ஓம் நித்யானந்தாய நமஹ !



பரிதாபத்திற்குரிய பக்த கோடிகளே...
கல்பதருவிற்கும் ,
ஆனந்த ஸ்பூர்ணாவிற்கும், நித்ய ஸ்பூர்ணாவிற்கும் ,
ஆசி பெறுவதற்கும்,
நீங்கள் பாடுபட்டு வியர்வை சிந்தி
அளித்த காணிக்கைகளும்,
கொடைகளும்
செல்லுமிடத்தை கவனத்தில் நிறுத்துங்கள்.


வேதம் ஓதும் சாத்தானந்தா...?

Don't you people recognise
these kind of guys
from their speech itself..?
(even before they were caught?)
Carefully listen to his
modulation,
attitude,pompous speech,
and answering,
cleverly covered with some Intelligence?!






இதையும் பார்த்து வையுங்கள்.. காசா..பணமா..

A 'RAJASEKARAN ' STATEMENT IN JAYA TV




எவனொருவன் மண்ணாசையும்,பெண்ணாசையும்,
பொன்னாசையும்,பொய்களையும் துறந்து வாழ்கிறானோ, அவனே பிறருக்கு போதனை செய்யும் தகுதி உடையவன் ஆகிறான்.
-சுவாமி விவேகானந்தர் .


நக்கி நக்கி *நரகலை நாவினிக்க தின்னுகின்ற
*குக்கலுக்கும் ஞானம் வரக் கூடும் - இனி
நக்குவதே இல்லை எனக் கூறும்.
பக்கம் வந்து பந்தி விட்டு எச்சில் இலை முந்தி விழ
வெட்கம் விட்டு நக்கி விட ஓடும் -அந்த
வேளையிலே நாணம் விடை கூறும்.
-கவிஞர் வாலி
*நரகல்-கழிவு
*குக்கல்-நாய்























No comments: